Published : 27 Jul 2016 10:50 AM
Last Updated : 27 Jul 2016 10:50 AM
நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு எதிராக, மாநிலங்களவை யில் நேற்று காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களவை கடந்த வெள்ளிக்கிழமை கூடியபோது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி வழங்க வகை செய்யும் தனி உறுப்பினர்கள் மசோதாவை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பியான கே.வி.பி.ராமச்சந்திர ராவ் கோரிக் கை விடுத்தார். அப்போது நாடாளுமன்ற விவகாரங்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஆம் ஆத்மி எம்பி பகவந்த் மான்னுக்கு எதிராக பாஜக எம்பிக்கள் போர்க்கொடி உயர்த்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியதுடன், நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த காங்கிரஸ் எம்பியான ராவ், அவையை முடக்கும் விதமாக நடந்து கொண்ட பாஜக எம்பிக்களை தடுத்து நிறுத்தாமல் அமைதி காத்த செயலுக்காக நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு எதிராக நேற்று உரிமை மீறல் நோட்டீஸை தாக்கல் செய்தார். 187 மற்றும் 188 விதிகளின் கீழ் நக்விக்கு எதிராக இந்த நோட்டீஸை வழங்கி இருப்பதாக பூஜ்ய நேரத்தின்போது, ராவ் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அந்த நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் பரிசீலித்து வருவதாகவும், விரைவில் இறுதி முடிவை அறிவிப்பார் என்றும் துணைத் தலைவர் குரியன் தெரிவித்தார்.ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்க வகை செய்யும் தனி உறுப்பினர்கள் மசோதாவை அமல்படுத்தும் விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் வரை அவை அலுவல் விவகாரத்தில் அரசுக்கு ஒத துழைப்பு அளிக்க மாட்டோம் என காங்கிரஸ் எச்சரித்துள்ளது. அதே சமயம் அமளியில் ஈடுபட்டு வரும் பாஜக எம்பிக்களுக்கு தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கடும் கண் டனம் தெரிவித்துள்ளன. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT