Published : 21 May 2015 02:37 PM
Last Updated : 21 May 2015 02:37 PM

பிரச்சனைகள் மத்தியில் மோடி இன்பச் சுற்றுலா: குபேந்திரன்

செய்தி:>ஓராண்டை நிறைவு செய்கிறது பாஜக அரசு: அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடா?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் குபேந்திரன் கருத்து:

ரோம் பற்றி எரியும் போது பிடில் வசித்து கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல், இந்தியர்கள் பல பிரச்சினைகளின் மத்தியில் அல்லாடி கொண்டிருக்கும் போது, உலக நாடுகளில் இன்பச் சுற்றுலா நடத்தி கொண்டிருக்கிறார் மோடி.

அதிகாரமும் மூன்று பேரிடம் மட்டும் குவிக்கப்பட்டிருப்பதால், எந்த முடிவு எடுத்தலும் தாமதப்படுகின்றது. விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. விலை வாசி உயர்வு தடுக்கப் பட வில்லை.

இவர் வாய் சொல் வீரர் மட்டும்தான், செயலில் ஒன்றும் இல்லை என்று தெரிந்து கொண்ட பன்னாட்டு முதலீட்டார்கள் தங்கள் பங்கு முதலீட்டை வாபஸ் பெற்று தென் கொரியா, பிரேசில், போன்ற சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x