Published : 22 May 2015 07:03 PM
Last Updated : 22 May 2015 07:03 PM

அரசுப் பள்ளிகளின் வைரங்கள் இவர்கள்: பாலகிருஷ்ணன்

செய்தி:>அரசுப் பள்ளிகளுக்கு மகுடம் சூட்டிய மாணவர்கள்: தமிழ் வழியில் பயின்று சாதனை படைத்த பாரதிராஜா

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பாலகிருஷ்ணன் கருத்து:

இதோ இங்கு மூன்று பளிச்சிடும் வைரங்கள். எதிர்கால மாணவர்களுக்கு திசைகாட்டிகள். அரசுபள்ளியில் படித்து சிகரம்தொட்டவர்கள். அரசுபள்ளியில் கல்விகற்பதை கவுரவக்குறைவாய் நோனைக்கும் நடுத்தர மக்களின் பொட்டில் அறைந்தவர்கள்.

பாரதிராஜா தமிழ்வழியில் கற்று முதலிடம் பிடித்துள்ளார். மற்ற இரண்டு மாணவிகளும் 5ஆம் வகுப்புவரை தனியார் பள்ளிகளில் படித்து பின்னர் அரசுபள்ளிகளுக்கு வந்தவர்கள். அரசுபள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை கொடுப்பதாலும் எதிர்காலத்தில் அரசுபள்ளி மாணவர்கள் சாதனைகளை படைப்பார்கள் என்பதனை நம்புவோம்.

நம் கல்வி, மாம் உரிமையென உரத்து குரல் கொடுப்போம். காசை அள்ளி வீசுவதால் கல்வியை வாங்கிவிட முடியும் என்ற மாயைக்கு முடிவு கட்டுவோம். மொத்தத்தில் நாம் அனைவரும் திருந்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x