Published : 20 Aug 2017 11:46 AM
Last Updated : 20 Aug 2017 11:46 AM

மீண்டும் சர்ச்சையில் மாதொருபாகன்!

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலின் ஆங்கில மொழியாக்கம் - ‘ஒன் பார்ட் உமன்’ – சாகித்ய அகாடமியின் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்லவா! இப்போது அதை முன்வைத்து மீண்டும் பிரச்சினை கிளம்பத் தொடங்கியிருக்கிறது. இம்மாத இறுதியில் சாகித்ய விருது அளிக்கப்படவிருக்கும் நிலையில், ‘இந்த நூலுக்கு விருது வழங்கக் கூடாது’ என்று சாகித்ய அகாடமிக்கும், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்துக்கும் திருச்செங்கோட்டிலிருந்து ஏராளமான கடிதங்களை அனுப்பியிருக்கின்றன, முன்னதாக இந்த நாவலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய குழுக்களில் சில.

‘நாவலுக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவிருக்கிறோம்’ என்று இந்தக் குழுக்கள் பேசிக்கொண்டிருக்க, ‘நீதிமன்றம் முடித்துவைத்த பிரச்சினையை மீண்டும் கிளப்ப எவரேனும் முற்பட்டால் முறைப்படி சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம்’ என்று சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன்.

- ஆர்.கிருஷ்ணகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x