Last Updated : 23 Sep, 2014 01:20 PM

 

Published : 23 Sep 2014 01:20 PM
Last Updated : 23 Sep 2014 01:20 PM

சுடும் நிஜம்!

சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்பதற்கான முதல் வேலை, அதைப் பற்றி அறிந்து கொள்வதுதான். இதோ, நமது சுற்றுச்சூழல் பற்றி அதிர்ச்சியடைய வைக்கும் சில உண்மைகள், சில மாற்று வழிகள்:

# ஒவ்வொரு நிமிடத்துக்கும் 100 ஏக்கர் மழைக்காடுகள் வெட்டி சாய்க்கப்படுகின்றன.

# நாளிதழ்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 25 கோடி மரங்களைக் காப்பாற்ற முடியும்.

# அமெரிக்க நிறுவனங்கள் ஓராண்டில் பயன்படுத்தும் காகிதத்தை மட்டும் வைத்துப் பூமிப் பந்தை மூன்று முறை சுற்றிவிடலாம்.

# நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 10 கோடி கிலோ குப்பை உருவாகிறது. அப்படியென்றால், ஆண்டுக்குச் சராசரியாக 3650 கோடி கிலோ குப்பை.

# கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் 10 லட்சம் கடல் உயிரினங்கள் ஆண்டுதோறும் இறந்துபோகின்றன.

# சுற்றுச்சூழலைச் சீர்கெடுப்பதில் ஒரு இந்தியரைப் போல 35 மடங்கும், வங்கதேசத் தவரைப் போல 140 மடங்கும், ஆப்பிரிக்கரைப் போல 250 மடங்கும் ஓர் அமெரிக்கர் சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கிறார்.

# வளர்ந்த, பணக்கார நாடுகளில் பிறக்கும் ஒரு குழந்தை, வளர்ந்துவரும் ஏழை நாடுகளில் பிறக்கும் ஒரு குழந்தையைப் போல 40 மடங்கு அதிகப் பொருட்களை வாங்குகிறது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.

# ஒரு கண்ணாடி குடுவையோ, புட்டியோ முழுமையாக மக்கிப் போக 4,000 ஆண்டுகள் ஆகும். அதனால் உடையும்வரை கண்ணாடிப் பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.

# அலுமினியப் பாத்திரங்களைக் காலாகாலத்துக்கும் மறுசுழற்சி செய்து பயன்படுத்திக்கொண்டே இருக்க முடியும். அதேநேரம் உணவுப்பொருட்களை அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பது நல்லதல்ல.

# குளிர்பானங்கள், மற்றப் பொருட்கள் அடைக்கப்பட்டுவரும் அலுமினியக் குவளையை மறுசுழற்சி செய்வதன் மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தால், ஒரு டிவியை மூன்று மணி நேரத்துக்கு இயக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x