Last Updated : 11 Nov, 2014 12:54 PM

 

Published : 11 Nov 2014 12:54 PM
Last Updated : 11 Nov 2014 12:54 PM

எட்டிப் பார்க்கும் பாம்பு

பாம்பு, மீன் வேட்டையாடுமா? தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டிப் பார்க்குமா? வாய்ப்பு குறைவுதான். ஆனால், பாம்பைப் போன்ற நீண்ட தலையையும், மீன் வேட்டையாடும் பண்பையும் கொண்டுள்ளது ஒரு பறவை. அதன் பெயர் பாம்புத்தாரா.

ஆங்கிலப் பெயர்: Oriental Darter or Snake Bird

பெயர்க் காரணம்: நீளமான கழுத்தைக் கொண்டது. தண்ணீருக்குள் இருந்து அவ்வப்போது வெளியே எட்டி பார்க்கும் தலை, வளைந்த பாம்பைப் போல நீண்டிருக்கும். அதன் காரணமாகவே இந்தப் பெயர் வந்தது.

அடையாளங்கள்: இதன் உடல் வாத்தைவிடச் சற்றே பெரிது. கறுப்பு நிறம், முதுகில் பளபளப்பான சாம்பல் நிறப் பட்டைகளைக் கொண்டிருக்கும். அலகு ஈட்டியைப் போலக் கூர்மையானது. மற்ற பறவைகளுடன் சேர்ந்து ஒரே மரத்தில் கூடு அமைக்கும்.

தனித்தன்மை: ஈரமாக இருக்கும் இறக்கைகளைக் காய வைப்பதற்காக நீர் காகத்தைப் போலவே பாம்புத்தாராவும் மரக் கிளைகளில் இறக்கைகளை விரித்து வைத்துக் காய வைக்கும்.

உணவு: ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் நீருக்குள் மூழ்கி மீன்களைப் பிடித்து உண்ணும்.

தென்படும்இடங்கள்: வேடந்தாங்கல், கூந்தங்குளம், வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்), வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x