Published : 19 Jun 2018 10:45 AM
Last Updated : 19 Jun 2018 10:45 AM

வேலை வேண்டுமா? - வங்கிப் பணி

 

பா

ங்க் ஆஃப் பரோடா வங்கியில் புரோபேஷனரி ஆபீசர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதிகாரிகளாகப் பணியமர்த்தப்படுவார்கள். பயிற்சிக் கட்டணம் ரூ. 3,45,000. வங்கிக் கடன் பெற்று பயிற்சிக் கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

காலிப் பணியிடங்கள்:600

வயது: 02.07.2018 அன்று குறைந்தபட்ச வயது 20, அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகியோர் 50 சதவீத மதிப்பெண்களும், பிறர் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு ரூ. 100. பிறருக்கு ரூ. 600. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதியுடையோர் www.bankofbaroda.com என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் 2018 ஜூலை 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் வெளியாகத் தொடங்கிய நாள்: 12.06.2018.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.07.2018

எழுத்துத் தேர்வு: 28.07.2018 (மாறுதலுக்குட்பட்டது)

கூடுதல் விவரங்களுக்கு:https://goo.gl/p9tfzH

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x