Last Updated : 13 Jan, 2015 12:31 PM

 

Published : 13 Jan 2015 12:31 PM
Last Updated : 13 Jan 2015 12:31 PM

யூனியன் பிரதேசமான கிராமங்கள்!

நம் நாட்டில் உள்ள வித்தியாசமான ஒரு யூனியன் பிரதேசம் தாத்ரா - நாகர்ஹவேலி. சுமார் இரண்டரை லட்சம் பேர் இங்கே வசிக்கிறார்கள். இந்த யூனியன் பிரதேசத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போமா?

# இந்தியாவில் சில பகுதிகளைப் பிடித்திருந்த போச்சுகீசியர்களும் மராட்டிய மன்னர்களும் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் போட்டுக் கொண்டிருந்த காலம். அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அப்போதைய மராட்டிய அரசு தங்கள் ஆளுகைக்குட்பட்ட 72 கிராமங்களை போர்ச்சுகீசியர்களுக்கு நன்கொடையாக அளித்தனர். இதற்கான ஒப்பந்தம் 1799-ம் ஆண்டில் போடப்பட்டது.

அப்படிக் கொடுக்கப்பட்ட கிராமங்களின் கூட்டம்தான் இன்றைய இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசமான தாத்ரா - நாகர்ஹவேலி.

# குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே இந்த யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது.

# ஆங்கிலேயர்களிடம் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் வெளியேறாமல் போர்ச்சுக்கீசியர்கள் அடம் பிடித்தார்கள். 1954-ம் ஆண்டில், இப்பகுதி மக்களே புரட்சி செய்து அவர்களை வெளியேற்றினார்கள். இதையடுத்து 1961-ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தன இப்பகுதிகள்.

# தாத்ரா - நாகர்ஹவேலிக்கெனத் தனியாக மின் உற்பத்தி, சாலைப் போக்குவரத்துக் கழகங்கள் கிடையாது.

# மின்சாரத்தை குஜராத் அரசு வழங்குகிறது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலமே இங்கு சாலைப் போக்குவரத்து பூர்த்தி செய்யப்படுகிறது.

# ரயில் போக்குவரத்து இல்லாத யூனியன் பிரதேசம் இது.

# 487 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகரம் சில்வாசா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x