Published : 22 Jun 2017 10:49 AM
Last Updated : 22 Jun 2017 10:49 AM
தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், ரசிகர்களைத் தவறாமல் சந்தித்து வருபவர் விஜய். ரசிகர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு, விருந்தளித்து வருகிறார்.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் ரசிகர்கள் இருந்தாலும், விஜய் மனதை விட்டு நீங்காத ரசிகர் ஒருவர் இருக்கிறார். அவரது பெயர் கார்த்திக். அவர் ஒரு மாற்றுத் திறனாளி.
கார்த்திக் ஏன் விஜய்க்கு ஸ்பெஷல் என்றால், பெங்களூருவிலிருந்து விஜய்யைப் பார்க்க வேண்டும் என நேராக படப்பிடிப்புக்கு வந்துவிட்டார் கார்த்திக். விஜய்யை நேரில் பார்த்தவுடன் மிகவும் சந்தோஷப்பட்டுள்ளார்.
"எதற்காக தனி ஆளாக, இப்படி வந்தீர்கள்" என விஜய் கேட்க, சந்தோஷத்தில் சைகையில் பல்வேறு விஷயங்களைக் கூறியிருக்கிறார். தனக்கு இப்படியொரு ரசிகரா என கண் கலங்கியுள்ளார் விஜய்.
இறுதியில் விஜய்க்கு ஆறுதல் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டார் கார்த்திக். அந்தளவுக்கு விஜய் நடித்த படங்களின் காட்சிகள், பாடல்கள், நடன அசைவுகள் உள்ளிட்ட அனைத்தையுமே செய்து காட்டியுள்ளார்.
இப்போதும் பல்வேறு ரசிகர்கள் தன்னை சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தாலும், இன்னும் கார்த்திக்கை மட்டும் விஜய் மறக்கவே இல்லை. அவ்வப்போது கார்த்திக்கை சுட்டிக்காட்டி தனது நண்பர்களிடம் பேசி வருகிறார் விஜய்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT