Published : 24 Jul 2014 04:36 PM
Last Updated : 24 Jul 2014 04:36 PM

விஐபி மூலம் நடிகர் ரகுவரனை கவுரவிக்கிறேன்: தனுஷ்

மறைந்த நடிகர் ரகுவரனை கவுரவப்படுத்தும் விதமாகவே வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நாயகனுக்கு ரகுவரன் எனப் பெயர் வைத்ததாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

தனுஷ் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வசூல் ரீதியில் ஹிட்டாகி இருக்கிறது.

"ரகுவரனை நீ வில்லனா தானே பாத்திருக்க, ஹீரோவா பார்த்ததில்லையே" போன்ற படத்தின் வசனங்கள் பல உண்மையான வேலையில்லா பட்டதாரிகள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. பலர் அதை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், "படத்தில் ரகுவரன் என நாயகனுக்கு பெயர் வைத்திருப்பது, நடிகர் ரகுவரனை கவுரவப்படுத்தும் விதமாகவே. அவருடன் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்" என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் தனுஷின் தந்தையாக யாரடி நீ மோகினி திரைப்படத்தில் ரகுவரன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே ரகுவரனின் கடைசி படம் என்பதும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x