Published : 28 Jun 2016 02:12 PM
Last Updated : 28 Jun 2016 02:12 PM
'மாயவன்' படத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றது ஏன் என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் விளக்கமளித்துள்ளார்.
'பீட்சா', 'சூது கவ்வும்', 'தெகிடி' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். தற்போது 'மாயவன்' என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.
சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'மாயவன்' படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
'மாயவன்' படம் குறித்து இயக்குநர் சி.வி.குமார், "முதலில் இப்படத்தின் கதை உருவான பின் நலன் குமாரசாமியை அழைத்து இயக்கி தரச் சொன்னேன். கதையினை படித்தவர் நன்றாக இருப்பதாகவும் தான் திரைக்கதையினை மேற்கொள்வதாகவும் என்னை இயக்கும்படியும் கூறினார்.
எனக்கு முதலில் படம் இயக்க தயக்கம் இருந்தது. ஆனால் நலன் குமாரசாமி உட்பட என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் என்னால் இதனை இயக்க முடியுமென்று நம்பிக்கை அளித்தனர். பின்னர் மும்முரமாக படம் இயக்கும் வேலையில் இறங்கி, தற்போது படப்பிடிப்பு நிறைவடையும் நிலைக்கு வந்திருக்கிறோம்.
இதுவரை நாங்கள் தயாரித்த அனைத்து படங்களிலும் பட துவக்கம் முதல் முடிவு வரை அனைத்திலும் எனது பங்களிப்பு இருந்துள்ளது. எனவே பட இயக்கத்தை தைரியமாக மேற்கொண்டேன். ஆனால் தயரிப்பாளராக இருந்து ஒரு படத்தின் இயக்குநரை வேலை வாங்குவதற்கும், இயக்குநராக வேலை செய்வதற்கும் இருக்கும் வித்தியாசத்தை எனக்கு இப்படம் உணர்த்தியது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT