Last Updated : 24 Jul, 2016 03:48 PM

 

Published : 24 Jul 2016 03:48 PM
Last Updated : 24 Jul 2016 03:48 PM

மரம் வளர்ப்பதன் மூலமே புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும்: நடிகர் விவேக்

மரம் வளர்ப்பதன் மூலமே புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும் என்று நடிகர் விவேக் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் விவேக் சார்பில் 'கலாம் பசுமை அமைதி பேரணி' சென்னையில் நடைபெற்றது. கண்ணகி சிலையில் இருந்து தொடங்கிய இப்பேரணியை சஞ்சய் ஆரோரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் இப்பேரணியில் பங்கேற்றனர்.

காலை 8:30 மணிக்கு ராணி மேரி கல்லூரியை இப்பேரணி வந்தடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாணவர்கள் மத்தியில் பேசிய விவேக், "மரம் வளர்ப்பதென்பது புவி வெப்பமடைவதை தடுப்பதற்க்கு மட்டுமல்ல. இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மூன்று மதங்களுமே மரம் வளர்ப்பதன் அவசியத்தை பற்றி கூறியுள்ளன. குறிப்பாக இந்து மதத்தில் ஆலம் மற்றும் அரச மரங்களை விநாயகராகவும், வேப்ப மரத்தினை அம்மனாகவும் வழிபடும் கலச்சாரம் இருக்கிறது. எனவே மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரவேண்டியது அத்தியாவசியம்.

மரம் வளர்ப்பதன் மூலமே புவி வெப்பமயமாக்கலை தடுக்க முடியும். குறைந்தபட்சம் ஒருவர் ஒரு மரக்கன்றை நட்டு அதனை பாதுகாப்பதன் மூலம் புவியையும், நீர் வளத்தினையும் காத்திடமுடியும். அது பல தலைமுறைகளை காப்பாற்ற வழி வகுக்கும்.கலாம் அவர்கள் எனக்களித்த இலக்கான 1 கோடி மரக்கன்றுகளில் சுமார் 27 லட்சத்து 35000 மரகன்றுகளை நட்டு விட்டேன். நான் என்று அவர் எனக்களித்த இலக்கினை அடைகிறேனோ அன்று தான் அவருக்கு நான் பூரணமாக அஞ்சலி செலுத்தியதாக கருதுவேன்." என்றார்.

அதன் பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் விருந்தினர்களாக கல்வி இயக்குனர் சேகர், ராணி மேரி கல்லூரி முதல்வர் ராஜ சுலோக்ஷனா, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கினைப்பாளர் பாஸ்கரன், வசந்த பவன் ரவி, ஓவியர் A.P.ஸ்ரீதர் மற்றும் தேஜஸ்வனி விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x