Published : 16 Dec 2014 05:44 PM
Last Updated : 16 Dec 2014 05:44 PM

தீவிர சிகிச்சை பிரிவில் இயக்குநர் கே.பாலசந்தர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் கே.பாலசந்தருக்கு அனுபவம் மிக்க மூத்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிறுநீர் பாதையில் ஏற்பட்ட கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும், மற்றபடி அவரது பொதுவான உடல்நிலை சீராகவே உள்ளது என்றும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

84 வயதான கே.பாலசந்தர் சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்டுள்ள கோளாறில் இன்னமும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலும் பொதுவான அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மருத்துவமனையில் பாலசந்தரை நேற்று மாலை பார்த்த பிறகு, ரஜினி கூறும்போது, "அவரை பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சிரித்தார். அவருக்கு எதுவும் ஆகாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x