Last Updated : 28 Sep, 2016 02:37 PM

 

Published : 28 Sep 2016 02:37 PM
Last Updated : 28 Sep 2016 02:37 PM

சிம்புவின் வயோதிக கதாபாத்திரம் வழக்கமானது அல்ல: இயக்குநர் ஆதிக்

சிம்பு நடிக்கும் 'அஸ்வின் தாத்தா' கதாபாத்திரத்தில் சிறப்பும்சங்கள் என்ன என்பதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

மதுரை மைக்கேல் என்ற ஒரு கெட்டப்பின் படப்பிடிப்பு மட்டும் முடிவுற்று இருக்கிறது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருக்கிறார். தற்போது அஸ்வின் தாத்தா என்ற 60 வயது நிரம்பிய கெட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தமன்னா மற்றொரு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் சிம்பு மற்றும் தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறது படக்குழு.

'அஸ்வின் தாத்தா' கதாபாத்திரம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது, "வழக்கமாக திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வயதான தாத்தா போன்று இந்த கதாபாத்திரம் இருக்காது. வயதானலே பலம் குறைந்துவிடும், முடி கெட்டுவிடும் என்ற எண்ணம் இருக்கிறது. அந்த விஷயங்கள் அனைத்தையுமே 'அஸ்வின் தாத்தா' கதாபாத்திரத்தில் உடைத்திருக்கிறேன். இந்த வித்தியாச வயோதிகரை இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இந்தக் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும்" என்று தெரிவித்தார்.

இந்தக் கதாபாத்திரத்துக்காக தான் சிம்பு உடல் எடையை அதிகரித்து தயாராகி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்தவுடன், முழுக்க உடல் எடையைக் குறைத்து மற்றொரு கதாபாத்திரத்துக்கு தயாராக இருக்கிறார் சிம்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x