Last Updated : 23 Aug, 2016 04:11 PM

 

Published : 23 Aug 2016 04:11 PM
Last Updated : 23 Aug 2016 04:11 PM

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு எழில் - உதயநிதி படம் ரிலீஸ்

எழில் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படத்தை கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

'மனிதன்' படத்தைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதைக் கேட்டு வந்தார் உதயநிதி ஸ்டாலின். அவற்றில் முதலில் எழில் படம் அதனைத் தொடர்ந்து கெளரவ் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

எழில் படத்தின் முதற்கட்ட பணிகள் முடிந்து சென்னையில் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

சூரி, ரெஜினா, சிருஷ்ணி டாங்கே உள்ளிட்ட பலர் உதயநிதியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இமான் இசையமைக்க இருக்க்கிறார். எப்போதுமே குறுகிய காலத்தில் சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பை முடிக்கும் எழில்.

இப்படத்தையும் டிசம்பர் மாதத்துக்கு முன்பாகவே மொத்த படப்பிடிப்பையும் முடித்து இறுதிகட்ட பணிகளையும் முடிக்க இருக்கிறார். கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. மேலும், இப்படத்தின் கோயம்புத்தூர் விநியோக உரிமையை பெரும் விலைக் கொடுத்து இப்போதே வாங்கியிருப்பது குறீப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x