Published : 29 Jan 2015 03:06 PM
Last Updated : 29 Jan 2015 03:06 PM
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' திரைப்படம் 100-வது நாளை கடந்திருப்பதற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கத்தி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்ச ஆதரவு பெற்றது லைக்கா நிறுவனம் என்று பல்வேறு பிரச்சினைகளை பின் இப்படம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது.
ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்று, இன்று 100-வது நாளை கடந்திருக்கிறது. இதற்கு படக்குழுவினர் சமூகவலைத்தளத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
"ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. விஜய் சார், தயாரிப்பாளர்கள், மொத்த படக்குழுவினர் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி" என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
"'கத்தி' மொத்த படக்குழுவினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி. ஏ.ஆர்.முருகதாஸ் சார், விஜய் சார், சமந்தா, ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ட்விட்டரில் #KATHTHIHitsCentury என்ற ஹேஷ்டேகை உருவாக்கி, அதை இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்க, குறும்பதிவுகளைக் குவித்தனர் விஜய் ரசிகர்கள்.
'கத்தி' 100வது நாளை தாண்டியிருக்கும் இச்சமயத்தில் அனிருத் படத்தின் பின்னணி இசையினை அதிகாரபூர்வமாக இன்று யு-டியூப் இணையத்தில் வெளியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT