Last Updated : 17 Sep, 2014 12:57 PM

 

Published : 17 Sep 2014 12:57 PM
Last Updated : 17 Sep 2014 12:57 PM

என் உடல்நிலையை நாடகமாக்க நினைத்தவர்களுக்கு வருத்தங்கள்: கமல்ஹாசன்

தான் நலமாக இருப்பதாகவும், உணவு ஒவ்வாமை காரணமாகவே மருத்துவமனையில் உள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உணவு ஒவ்வாமை (ஃபுட் பாய்சன்) காரணமாக, நடிகர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக அவருக்கு நரம்பு பிரச்சினை என்று தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து தொலைபேசி மூலம் பேசிய கமல்ஹாசன், "எனக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் இருக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை. இந்தச் செய்தியை வைத்து பெரிய நாடகம் நடத்த நினைத்தவர்களை ஏமாற்றியதற்காக வருந்துகிறேன்" என்றார்.

மேலும அவர் கூறும்போது, "கேரளாவின் உட்பகுதிகளில் படப்பிடிப்பில் இருந்தோம். அங்கு சரியான உணவகங்கள் இல்லை. அதனால், சாலையோர கடைகளில் சாப்பிட்டோம். அங்கே இருந்த தண்ணீரை குடித்தோம். அதன் விளைவாகதான் நான் மருத்துவமனையில் இருக்கிறேன். எனக்கு வெறும் உணவு ஒவ்வாமை மட்டுமே ஏற்பட்டுள்ளது" என்றார் நடிகர் கமல்ஹாசன்.

'த்ரிஷ்யம்' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் அண்மையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x