Last Updated : 09 Feb, 2016 12:20 PM

 

Published : 09 Feb 2016 12:20 PM
Last Updated : 09 Feb 2016 12:20 PM

இயக்குநர் ஷங்கரின் கடும் கெடுபிடிகள் பிடியில் 2.0 படக்குழு

மார்ச் மாதம் சென்னையில் தொடங்கவிருக்கும் '2.0' படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கடும் கெடுபிடிகள் விதித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சன் மற்றும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும், ரோபோக்களை வைத்து படமாக்க இருக்கும் காட்சிகள் எப்படி வரவேண்டும் என்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார் ஷங்கர்.

மார்ச் முதல் வாரத்தில் '2.0' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இப்படப்பிடிப்பின் முதல் கட்டத்தில் அக்‌ஷய்குமார் - ரஜினி சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக்காட்சியை சண்டைக்கலைஞர்கள் சிலரை வைத்து காட்சிப்படுத்தி அதனை கிராபிக்ஸ் குழுவிடம் கொடுத்து எப்படி வரவிருக்கிறது என்று பார்வையிட இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து அக்‌ஷய்குமார் - ரஜினி சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளை காட்சிப்படுத்த இருக்கிறார். இக்காட்சிகள் படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு அரங்கிற்குள் யாருமே மொபைல் போன் கொண்டுவரக் கூடாது என்று கட்டளையிட்டு இருக்கிறார் ஷங்கர்.

மேலும், மிகவும் முக்கியமான காட்சிகள் படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் இருக்கு புகைப்படக்காரர் கூட வேண்டாம் என்று கூறிவிட்டாராம் ஷங்கர். இக்காட்சியின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு சின்ன புகைப்படம் கூட வெளியே போய்விடக் கூடாது என்பதில் மிகவும் திவிரமாக இருக்கிறார் ஷங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x