Published : 19 Feb 2017 08:46 AM
Last Updated : 19 Feb 2017 08:46 AM

அமலாபால் - இயக்குநர் விஜய் விவாகரத்து வழக்கில் 21-ம் தேதி தீர்ப்பு

பிரபல நடிகை அமலா பால் - திரைப்பட இயக்குநர் விஜய் திரு மணம் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஜூன் 12-ம் தேதி நடந் தது. திருமணத்துக்குப் பிறகு, அமலாபால் தொடர்ந்து சினிமா வில் நடித்து வந்தார். அவர் நடிப் பதை கணவர் விஜய்யும், அவரது குடும்பத்தினரும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுமுகமாக பிரிய முடிவு செய்தனர். அதன்படி இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி, பரஸ்பரம் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 2-வது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பூங்குழலி முன்பு நடந்தது. விஜய், அமலா பால் இருவரும் நேரில் ஆஜராகி, மனமொத்துப் பிரிவதாக கூறி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தனர். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதி வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x