Published : 21 Jun 2018 06:27 PM
Last Updated : 21 Jun 2018 06:27 PM
ரஜினிகாந்த் தங்கிய இல்லத்துக்கு, அவருடைய பெயரையே வைத்துள்ளார் உரிமையாளர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். சனந்த் ரெட்டியின் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களாக குர்சியாங் என்ற இடத்தில் உள்ள அலிதா தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அந்த விடுதியில் உள்ள ‘டைரக்டர்ஸ் பங்களா’ என்று அழைக்கப்படும் தனி இல்லத்தில் தங்கியிருந்தார்.
ரஜினி தங்கியிருந்தால், அவர் நினைவாக அந்த இல்லத்தின் பெயரை ‘ரஜினிகாந்த் இல்லம்’ என மாற்றியுள்ளார் விடுதியின் உரிமையாளரான மேகுல் பரேக். அதுமட்டுமல்ல, அவர் நினைவாக அந்த இல்லத்தில் ஒரு செடியையும் நட்டு வளர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஜினி தினமும் பருகிய தேநீருக்கு ‘தலைவா தேநீர்’ என்று பெயரிட்டுள்ளனர். அவர் பருகிய தேநீர்க்கோப்பை, விடுதியின் வரவேற்பறையில் உள்ள ஸ்பெஷல் ட்ரேயில் வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT