Published : 22 May 2018 06:18 PM
Last Updated : 22 May 2018 06:18 PM
தூத்துக்குடி வன்முறை குறித்து, ‘வரலாற்றுப் பிழை செய்து விட்டீர்கள்’ என ஜீ.வி.பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். பலர், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து ட்விட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ள இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், “உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்குத் தடைவிதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக அமைதிப் பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். வரலாற்றுப் பிழை செய்து விட்டீர்கள்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
“தூத்துக்குடி வன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு” - ரஜினிகாந்த்
‘தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்’ - கவிஞர் வைரமுத்து கோரிக்கை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT