Published : 18 May 2018 09:46 PM
Last Updated : 18 May 2018 09:46 PM

முதன்முறையாக போலீஸாக நடிக்கும் பிரபுதேவா

தன்னுடைய இணை இயக்குநர் இயக்கும் படத்தில், முதன்முறையாக போலீஸாக நடிக்கிறார் பிரபுதேவா.

‘போக்கிரி’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பிரபுதேவாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் ஏ.சி.முகில். ‘வில்லு’ படத்துக்கு வசனம் எழுதியவர் இவர்தான். தற்போது இவர் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பிரபுதேவா, அதுவும் போலீஸாக. பிரபுதேவா போலீஸாக நடிக்கும் முதல் படம் இதுதான். ‘மீகாமன்’ மற்றும் ‘டிக் டிக் டிக்’ படங்களின் தயாரிப்பாளர் நேமிசந்த் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

பிரபுதேவா நடிப்பில் கடைசியாக ‘மெர்க்குரி’ படம் ரிலீஸானது. சைலன்ட் த்ரில்லரான இந்தப் படத்தில், பார்வையற்றவராக நடித்தார் பிரபுதேவா. அவர் கைவசம் தற்போது ‘லக்‌ஷ்மி’, ‘யங் மங் சங்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ (‘கொலையுதிர் காலம்’ படத்தின் இந்தி வெர்ஷன்) ஆகிய படங்கள் உள்ளன.

இதுதவிர, சல்மான் கானை வைத்து ‘தபாங் 3’ இந்திப் படத்தை இயக்க இருக்கிறார் பிரபுதேவா. அதன்பிறகு, பார்த்திபன் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

முதல் பார்வை: காளி

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் அரசியல் படம் ‘எல்.கே.ஜி’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x