Published : 18 May 2018 06:08 PM
Last Updated : 18 May 2018 06:08 PM

‘மரகத நாணயம்’ இயக்குநரின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் அதர்வா

‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணின் அடுத்த படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்கிறார்.

‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.கே.சரவண். ஆதி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், நிக்கி கல்ரானி ஹீரோயினாக நடித்தார். ஆனந்தராஜ், ‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸ், மைம் கோபி, டேனியல் உள்படப் பலர் நடித்துள்ளனர். ஃபேன்டஸி காமெடிப் படமான இது, கடந்த வருடம் ரிலீஸானது.

இந்நிலையில், தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கத் தயாராகி விட்டார் ஏ.ஆர்.கே.சரவணன். இந்தப் படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’, ‘காதல் கசக்குதய்யா’, ‘ராஜா மந்திரி’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ‘எட்செட்ரா எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ (Etcetera Entertainments) நிறுவனம் சார்பில் மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

அதர்வா நடிப்பில் ‘செம போத ஆகாதே’ வருகிற 25-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ‘ருக்குமணி வண்டி வருது’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ஒத்தைக்கு ஒத்தை’, ‘பூமராங்’ ஆகிய படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன. இதுதவிர, ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அதர்வா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x