Published : 15 May 2018 06:01 PM
Last Updated : 15 May 2018 06:01 PM

சூர்யா படத்துக்கு இசையமைக்கத் தொடங்கிய ஜீ.வி.பிரகாஷ்

சூர்யாவின் 38-வது படத்துக்கு இசையமைக்கும் வேலையைத் தொடங்கிவிட்டார் ஜீ.வி.பிரகாஷ்.

சூர்யா தற்போது ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கி வரும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துவரும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இது, சூர்யாவின் 36-வது படமாகும்.

இதைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்பட வெளிநாடுகளிலும் இதன் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு, ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. அவருடைய 38-வது படமான இதற்கு, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படம் தொடங்க இன்னும் நாட்கள் இருந்தாலும், இப்போதே பாடல்களுக்கான இசையமைக்கும் வேலையைத் தொடங்கி விட்டார் ஜீ.வி.பிரகாஷ். இசையமைப்பின்போது ஜீ.வி.பிரகாஷுடன் சுதா கொங்கரா எடுத்துக் கொண்ட செல்ஃபீ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x