Published : 10 May 2018 01:37 PM
Last Updated : 10 May 2018 01:37 PM

விஜய் சேதுபதி - அஞ்சலி படம்: வருகிற 25-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது

விஜய் சேதுபதி - அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, வருகிற 25-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண் குமார். இரண்டாவதாகவும் விஜய் சேதுபதியை வைத்து ‘சேதுபதி’ படத்தை இயக்கினார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

எனவே, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே ‘இறைவி’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. ‘மேயாத மான்’ படத்தில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த விவேக் பிரசன்னா, முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘பாகுபலி 2’ படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. வருகிற 25-ம் தேதி, தென்காசியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 20 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது.

அதன்பிறகு, மலேசியாவில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக தற்போது அபுதாபி சென்றுள்ள விஜய் சேதுபதி, அங்கிருந்து திரும்பி வந்ததும் உடனடியாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

“நான் துல்கர் சல்மானுக்கு ரசிகனாகி விட்டேன்” - எஸ்.எஸ்.ராஜமெளலி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x