Published : 10 May 2018 09:33 AM
Last Updated : 10 May 2018 09:33 AM
வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை ஏன் தொடங்கினேன் என்பதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார் தனுஷ்.
பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நேற்று இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய தனுஷ், தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது ஏன் என்பதற்கான காரணத்தை விளக்கினார்.
“வுண்டர்பார் நிறுவனம் எப்படித் தொடங்கியது என்றால், செல்வா (செல்வராகவன்) சார் பட வாய்ப்புக்காக நிறைய நடிகர்களிடம் கதை சொல்லி, நிறைய தயாரிப்பு நிறுவனங்களின் படிகளில் ஏறி, இறங்கிக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது ஒருநாள் என்னிடம் வருத்தப்பட்டு, ‘ஒருவேளை நாளைக்கு நாம் சினிமாவில் ஜெயித்துவிட்டோம் என்றால், நல்ல திறமைகளுக்கு வழியமைத்துக் கொடுக்க கண்டிப்பாக நாம் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும்’ என்று சொன்னார். அதற்காகத் தொடங்கப்பட்டது வுண்டர்பார் ஃபிலிம்ஸ்.
எங்களால் எத்தனைத் திறமைகளைக் கண்டுபிடிக்க முடியுமோ, அவர்களுக்கு பிளாட்ஃபார்ம் கொடுக்க முடியுமோ... அதை இதுவரைக்கும் செய்து கொண்டிருக்கிறோம். அதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்படி வந்து கொண்டிருக்கிற வுண்டர்பாரின் 12-வது படம் ‘காலா’. இந்தப் படத்தின் குழுவினருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநராக அறிமுகமான ‘3’ படத்தின் மூலம் தயாரிப்பைத் தொடங்கியது வுண்டர்பார் ஃபிலிம்ஸ். தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ படங்களைத் தயாரித்த இந்த நிறுவனம், தனுஷ் இயக்குநராக அறிமுகமான ‘பவர் பாண்டி’ படத்தையும் தயாரித்துள்ளது.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
“ரஜினியின் பவரை ‘காலா’வில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்” - பா.இரஞ்சித்
‘காலா’ இசை வெளியீட்டு விழாவை ட்விட்டரில் பார்த்து ரசித்த சிவகார்த்திகேயன்
‘காலா’ என பிரிண்ட் செய்யப்பட்டப் புடவையை அணிந்துவந்த சந்தோஷ் நாராயணன் மனைவி
“ரஞ்சித்தின் நட்பு கிடைத்தது ரஜினியுடன் பணியாற்றத்தானோ எனத் தோன்றுகிறது” - கலை இயக்குநர் ராமலிங்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT