Published : 01 May 2018 06:44 PM
Last Updated : 01 May 2018 06:44 PM

முகம் தெரியாத சக தொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் - இயக்குநர் சுசீந்திரன்

‘முகம் தெரியாத சக தொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித்' என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று நடிகர் அஜித்துக்கு 47-வது பிறந்த நாள். அவருடைய ரசிகர்கள் பலரும் பல்வேறு விதங்களில் இந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். பலரும் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் அஜித் பற்றி ஒரு புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார். “நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, எனது நண்பன் உதவி இயக்குநர் ரோஜா ரமணன் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய ஆபரேஷனுக்கு மூன்று லட்ச ரூபாய் தேவைப்பட்டது.

நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சினிமாத்துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம். அப்போதுதான் முதன்முதலில் ‘ஜனா’ படப்பிடிப்பில் அஜித்தைச் சந்தித்தேன். ரோஜா ரமணனின் நிலையைக் கூறினேன். அப்போதே முகம் தெரியாத சக தொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்குப் பெரிய மரியாதை உண்டு. அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x