Last Updated : 01 Dec, 2017 06:49 PM

 

Published : 01 Dec 2017 06:49 PM
Last Updated : 01 Dec 2017 06:49 PM

படம் பார்த்தால் அனைத்துக்குமே முடிவு: நாச்சியார் சர்ச்சை குறித்து ஜோதிகா

படம் பார்த்தால் அனைத்துமே முடிவுக்கு வந்துவிடும் என்று 'நாச்சியார்' சர்ச்சை குறித்து ஜோதிகா தெரிவித்திருக்கிறார்.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாச்சியார்'. பி ஸ்டூடியோஸ் மற்றும் ஈயான் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'நாச்சியார்' டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது.

அந்த டீஸரின் இறுதியில் ஜோதிகா பேசிய வசனம் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இது தொடர்பாக பல்வேறு இயக்கங்கள் தங்களுடைய கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார் ஜோதிகா. அப்போது பத்திரிகையாளர்கள் பலரும் 'நாச்சியார்' டீஸர் சர்ச்சை தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு "அந்த டீஸரைப் பற்றி இப்போது பேச வேண்டாம். படம் பார்த்தால் அனைத்துமே முடிவுக்கு வந்துவிடும். அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை" என்று தெரிவித்தார் ஜோதிகா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x