Last Updated : 19 Sep, 2017 12:18 PM

 

Published : 19 Sep 2017 12:18 PM
Last Updated : 19 Sep 2017 12:18 PM

என் அன்பானவளுக்கு நன்றி: நயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்

தன் பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து 'என் அன்பானவளுக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருக்கும் 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு சமயத்தில் காதல் உருவானது. இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

'தானா சேர்ந்த கூட்டம்' படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த இடைவெளியில், தன் பிறந்தநாளைக் கொண்டாட நயன்தாராவுடன் நியூயார்க் நகரத்துக்குச் சென்றார் விக்னேஷ் சிவன். மேலும், இதுவரை நயன்தாரா நடித்த படங்களைப் பற்றி கருத்துச் சொல்லி வந்தவர், அவருடன் புகைப்படங்களைக் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததில்லை.

— Vignesh ShivN (@VigneshShivN) September 18, 2017

நியூயார்க்கில் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "இப்படியான ஒரு பிறந்தநாள் வரும் என கனவு கூட கண்டதில்லை. கடவுளுக்கு முதலில் நன்றி. இந்த வாழ்க்கையை அழகாகவும், பிரகாசமாகவும் மாற்றிய என் அன்பானவளுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

செப்டம்பர் 25-ம் தேதி முதல் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடித்து பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x