Published : 09 Sep 2017 04:30 PM
Last Updated : 09 Sep 2017 04:30 PM
பரணி காலில் விழுந்து மன்னிப்புக் கோரியது நானே என்று நேற்றைய பிக் பாஸ் நிகழ்வில் சுஜாவிடம் ஜூலி தெரிவித்தார்.
சமீபத்திய பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மக்களிடையே கொஞ்சம் வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் பிரபலங்களின் குடும்பத்தினர், வீட்டிற்குள் அனுப்பப்பட்டு ஆச்சர்யப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதில் சிநேகனின் தந்தை பிக் பாஸ் வீட்டிற்கு சென்றது அனைவரையும் கலங்கடித்தது. ஏனென்றால், இருவரும் சந்தித்து 15 வருடங்களாகிறது. சென்னைக்கு வந்தப் பிறகு சிநேகன் தனது சொந்த கிராமத்துக்கு செல்லவே இல்லை.
நேற்றைய (செப்டம்பர் 8) நிகழ்ச்சியில் ஆரவ்வின் குடும்பத்தினர் வந்தனர். அதற்கு முன்பாக சுஜா மற்றும் ஜூலி இருவரும் பேசிக் கொண்டார்கள். அவை அப்படியே..
சுஜா: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே போனவுடன் எப்படி பார்த்தார்கள்?
ஜூலி: நான் சாதாரணமாக தான் போனேன். ஆனால், பார்ப்பவர்கள் என்னை செலிபிரட்டி மாதிரி காண ஆரம்பித்துவிட்டார்கள். சில பேர் "நீங்க தானே 'பிக் பாஸ்' ஜூலி" என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்கள். பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பெசன்ட் நகர் கடற்கரைக்கு அருகே கோயிலுக்கு சென்றிருந்த போது, ஒரு அடகு கடைக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் பார்த்து அங்கியிருப்பவர்களிடம் சொல்லி சுமார் 300 பேர் கூடிவிட்டார்கள்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றவுடன் முதல் நாள் மட்டுமே வெளியே சென்றேன். அதற்குப் பிறகு ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து சனிக்கிழமை வெளியே சென்றேன். ஞாயிற்றுகிழமை அன்று வளசரவாக்கத்தில் பரணி அண்ணா இருக்கிறார் என்று தெரிந்து அங்குச் சென்றேன். பின்பு, நம்பரை தேடிப் பிடித்து சேப்பாக்கத்தில் இருக்கிறார் என்று தெரிந்து சென்று அவருடைய காலில் விழுந்து வந்தவுடன் வீட்டிலிருந்து எங்கேயும் செல்லவில்லை.
சுஜா: அது நீதானா?
ஜூலி: ஆம். நான் தான்.
சுஜா: எதனால் திடீரென்று?
ஜூலி: எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் இருந்தது. பரணி அண்ணன் இங்கிருந்து போனதிலேயே வருத்தம் தான். அவரை அண்ணன் என கூப்பிட்டவள் நான். என்னிடம் உண்மையாகத் தானே இருந்தார். அவர் இங்கிருந்து சுவர் ஏறிக் குதிக்கும் போதே வருத்தப்படத் தொடங்கிவிட்டேன்.
சுஜா: அப்போதே ஏன் சொல்லவில்லை
ஜூலி: பரணி அண்ணன் என்னிடம் "என்னோடு சேராதே. அப்படிச் சேர்ந்தால் அனைவருமே உன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்று கூறினார்.
இவ்வாறு சுஜா மற்றும் ஜூலி இருவருக்கும் இடையே ஆன பேச்சுகள் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT