Published : 27 Aug 2017 06:02 PM
Last Updated : 27 Aug 2017 06:02 PM
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தில் சாயிஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் கோகுல். இப்படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' 2-ம் பாகமாக இல்லாமல் புதிய கதையை இயக்க முடிவு செய்தார்.
'ஜுங்கா' என்று தலைப்பிடப்படுள்ள இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு பாரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இதன் நாயகியாக ஏமி ஜாக்சன் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், சாயிஷா சைகல் ஒப்பந்தம் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
விரைவில் ஒரு மாதம் படப்பிடிப்புகாக பாரீஸ் நாட்டிற்கு செல்லவுள்ளார்கள். தற்போது இதர படக்குழுவினரை ஒப்பந்தம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT