Last Updated : 08 Feb, 2016 12:50 PM

 

Published : 08 Feb 2016 12:50 PM
Last Updated : 08 Feb 2016 12:50 PM

2-ம் பாகத்துக்கான தொடக்கத்துடன் முடிவடையும் தெறி

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'தெறி' படத்தின் இரண்டாம் பாகம் வருவது உறுதி என படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'தெறி' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளிவரும் 50வது படம் இது.

இப்படத்தின் டீஸர் யூ-டியூப் தளத்தில் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பெரும் சாதனை படைத்திருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளிவரும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். மேலும், "’Meet you in THERI 2’ என்ற வாசகத்துடன் 'தெறி' படம் முடிவடைவது போல காட்சி அமைத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ.

இரண்டாம் பாகத்தில் விஜய், மீனாவின் மகள் நைனிகா, ஏமி ஜாக்சன் ஆகியோர் பிரதான பாத்திரங்களாக இருப்பது போல வடிவமைத்திருக்கிறார். இப்படத்தின் இரண்டாம் பாகம் வருவது உறுதி" என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x