Published : 28 Apr 2016 06:13 PM
Last Updated : 28 Apr 2016 06:13 PM
'24' படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் விக்ரம் குமார்.
சூர்யா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன் நடிக்க, இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் '24'. திரு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். சூர்யா தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மே 6ம் தேதி வெளியிட இருக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க இருக்கிறார் இயக்குநர் விக்ரம் குமார். மேலும், '13 பி' படத்தைத் தொடர்ந்து '13 சி', '13 டி' என அடுத்தடுத்த பாகங்களை எழுதி வைத்திருக்கிறாராம்.
அப்படங்களை தான் 'இஷ்க்' மற்றும் 'மனம்' படத்திற்கு முன்பே இயக்கி இருக்க முடியும். அவ்வாறு இயக்கி இருந்தால் அனைவருமே ஹாரர் த்ரில்லர் படங்களை மட்டுமே இயக்குபவர் என்று கூறியிருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார் விக்ரம் குமார்.
மேலும், '13 பி' படத்தின் அடுத்த பாகத்தை இயக்கும் போது மாதவனிடம் பேசவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT