Last Updated : 25 Jun, 2014 01:41 PM

 

Published : 25 Jun 2014 01:41 PM
Last Updated : 25 Jun 2014 01:41 PM

பாடலாசிரியரான இயக்குநர் சி.எஸ்.அமுதன்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'அனேகன்' படத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.

தனுஷ், அமிரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்க கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விரைவில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இடம்பெற இருக்கும் ஒரு பாடலின் வரிகள் காமெடியாக இருக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். 'தமிழ் படம்' இயக்குநர் அமுதன் எப்போது ட்விட்டர் தளத்தில் காமெடியாக ட்வீட் செய்து வருவார். இதனால் கே.வி.ஆனந்த் இப்பாடலின் வாய்ப்பை அமுதனுக்கு அளித்திருக்கிறார்.

"போதும்டா சாமி.. 9 டூ 5 போராட்டம்.. காஞ்சிப்போன செடிக்கு தேவை நிறைய நீரோட்டம்" என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறார் அமுதன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x