Last Updated : 27 May, 2014 11:29 AM

 

Published : 27 May 2014 11:29 AM
Last Updated : 27 May 2014 11:29 AM

தொழில் பக்தி! - நாசரைப் பாராட்டிய கமல்

மகன் மருத்துவமனையில் இருக்கும் போது, 'உத்தம வில்லன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் நாசரை புகழ்ந்து வருகிறார் கமல்.

கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, நாசர், இயக்குநர் பாலசந்தர் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'உத்தம வில்லன்'. ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறது.

ஹைதராபாத், பெங்களூர், துருக்கி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள சன் டி.வி ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. 8ம் நூற்றாண்டு காலத்தின் காட்சிகளை படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள்.

அப்படப்பிடிப்பின் போது தான் நாசரின் மகன் பைசலுக்கு விபத்து ஏற்பட்டது. அச்சமயத்தில் படப்பிடிப்பில் இருந்த நாசர், மருத்துவமனைக்கு விரைந்தார். இதனால் கமல் படப்பிடிப்பினை அன்றைய தினம் ரத்து செய்தார்.

மகன் சரியான உடன் தான் நாசர் திரும்புவார் என்று எண்ணிய கமல், படத்திற்காக போடப்பட்ட 8ம் நூற்றாண்டைப் பிரதிபலிக்கும் செட்டை பிரிக்கச் சொல்லி இருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட நாசர், கமலைத் தொடர்பு கொண்டு "மருத்துவமனையில் உட்காந்து இருக்கவே ஒரு மாதிரி இருக்கிறது. செட்டை எல்லாம் பிரிக்க வேண்டாம். நான் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்" என்று கூறிவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்திருக்கிறார்.

நாசரின் இந்த பண்பால், 'உத்தம வில்லன்' படக்குழு நாசரை வெகுவாக பாராட்டி இருக்கிறது. தற்போது தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x