Last Updated : 14 May, 2014 01:19 PM

 

Published : 14 May 2014 01:19 PM
Last Updated : 14 May 2014 01:19 PM

தொடங்குமா சிம்பு - செல்வராகவன் படம்?

'இரண்டாம் உலகம்' பட பிரச்சினையால் ஏப்ரலில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த சிம்பு - செல்வராகவன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

'இரண்டாம் உலகம்' படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க திட்டமிட்டார் இயக்குநர் செல்வராகவன். ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டார்கள். த்ரிஷா நாயகி, யுவன் இசை, மது அம்பாட் ஒளிப்பதிவு என படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

தற்போது இப்படம் தொடங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 'இரண்டாம் உலகம்' தோல்வியால், செல்வராகவன் - பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்பிரச்சினை இன்னும் முடியாததால், இப்படம் தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

சிம்பு - செல்வராகவன் படத்தினை தயாரிக்க திட்டமிட்ட வருண்மணியன், "செல்வராகவன் - பி.வி.பி சினிமாஸ் இடையேயான பிரச்சினைகளை முடித்தவுடன் தான், சிம்பு படத்தினை தொடங்க முடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது 'வாலு' படத்திற்காக வெளிநாட்டில் இருக்கும் சிம்பு, சென்னை திரும்பியவுடன் பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவோடு நடித்து வரும் 'இது நம்ம ஆளு' படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x