Published : 22 Mar 2016 02:42 PM
Last Updated : 22 Mar 2016 02:42 PM
'தெறி' இசை வெளியீட்டு விழாவில் தனது பேச்சில் இடம்பெற்ற தவறான தகவலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார விஜய்.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தெறி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தன்னுடைய பேச்சுக்கு இடையே இரண்டு குட்டிக் கதைகளைச் சொன்னார். அதில் ரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை என்று ஒரு கதையைக் குறிப்பிட்டார். மாவோ சீன தேசத்து தலைவர்.
விஜய்யின் பேச்சைக் குறிப்பிட்டு இணையத்தில் பலரும் அவரைக் கலாய்த்து வந்தார்கள். விஜய்யின் பேச்சில் இருந்த தவறு குறித்து அவரது நெருங்கிய நபர்கள் விஜய்யிடம் தெரிவித்தார்கள்.
இது தொடர்பாக விஜய் தரப்பில் இருந்து அளித்த விளக்கத்தில் "சுட்டிக்காட்டப்பட்ட தவறை விஜய் அறிந்தார். கதை சொல்லும்போது பெயரைத் தவறாக சொன்னதற்காக வருத்தப்பட்டார். தன் ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லும்போது, தெரியாமல் நடந்த தவறு அது. மேடையில் பேசும்போது அத்தகைய தவறுகள் வருவதுண்டு என்று அவர் கூறியதுடன், இனி கவனத்துடன் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT