Last Updated : 05 Nov, 2015 03:25 PM

 

Published : 05 Nov 2015 03:25 PM
Last Updated : 05 Nov 2015 03:25 PM

தாரை தப்பட்டை-க்காக நடிகை வரலெட்சுமி கூடுதல் ஈடுபாடு

பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தாரை தப்பட்டை' படத்தில் 'சூறாவளி' என்ற கரகாட்டக்காரி பாத்திரத்தில் நடித்திருக்கிறார் வரலெட்சுமி.

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐங்கரன் நிறுவனம் இப்படத்தின் உரிமையை கைப்பற்றி இருக்கிறது. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இப்படத்தில் 'சூறாவளி' என்ற கரகாட்டக்காரி பாத்திரத்தில் நடித்திருக்கிறார் வரலெட்சுமி. இந்த வேடத்துக்காக கரகாட்டக் குழுவுடன் சுமார் மூன்று மாதங்கள் இருந்து அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் செயல் மொழி ஆகியவற்றை கற்றுக் கொண்டு, பிறகு நடித்திருக்கிறார்.

கரக்காட்டக் குழுவில் இருக்கும் இருவருக்கு இடையே காதல் வந்தால் எப்படி தங்களது நடனம் மூலம் பேசிக் கொள்வார்கள் உள்ளிட்ட காட்சிகளில் எல்லாம் சசிகுமார் மற்றும் வரலெட்சுமியின் நடிப்பை வெகுவாக பாராட்டி இருக்கிறார் இயக்குநர் பாலா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x