Last Updated : 30 Jun, 2016 12:01 PM

 

Published : 30 Jun 2016 12:01 PM
Last Updated : 30 Jun 2016 12:01 PM

தள்ளிப் போகாமல் ரிலீஸ் ஆகுமா அச்சம் என்பது மடமையடா?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'அச்சம் என்பது மடமையடா' படம் வெளிவருவதற்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

ஜூலை 15ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. படக்குழு அறிவித்த சமயத்தில் 'கபாலி' ஜூலை 1ம் தேதி வெளியீடாக இருந்தது. அதனால், அப்படம் வெளியாகி 2 வாரம் இடைவெளி விட்டு 'அச்சம் என்பது மடமையடா' என்று படக்குழு திட்டமிட்டது.

இச்சமயத்தில் 'கபாலி' ஜூலை 22ம் தேதி வெளியீடாக மாறியிருக்கிறது. மேலும், இன்னும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு வருவதில்லை என்றும், அதனால் 'தள்ளிப் போகாதே' பாடல் இன்னும் படமாக்கப்படவில்லை என்று கெளதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.

இதனால் படக்குழு திட்டமிட்டப்படி இப்படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் 'தள்ளிப் போகாதே' பாடல் படமாக்காமல் வெளியிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றும் கெளதம் மேனன் குறிப்பிட்டு இருக்கிறார்.

'அச்சம் என்பது மடமையடா' படத்தின் இடையே தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பே பாக்கி இருக்கிறது. இதனால் இரண்டு படத்தையும் விரைவில் முடித்து வெளியிடும் முனைப்பில் இருக்கிறார் கெளதம் மேனன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x