Last Updated : 23 Nov, 2014 05:36 PM

 

Published : 23 Nov 2014 05:36 PM
Last Updated : 23 Nov 2014 05:36 PM

சத்தமின்றி படத்தை முடிக்கும் தருவாயில் மணிரத்னம்



'கடல்' படத்தின் படுதோல்விக்கு பிறகு தனது படத்தின் கதையையும் திரைக்கதையையும் மிகவும் பொறுமையாக வடிவமைத்து வந்தார் இயக்குநர் மணிரத்னம்.

தனது அடுத்த படத்தில் ராம்சரணை இயக்குகிறார், இந்தி படத்தை இயக்க இருக்கிறார் என பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. இறுதியாக துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் படத்தை சென்னையில் தொடங்கினார் மணிரத்னம்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'நாயகன்', 'அக்னி நட்சத்திரம்' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.சி.ஸ்ரீராம் மீண்டும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று நிலையில், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து மறுபுறம் 'ஐ' படத்தின் DI பணிகளையும் கவனித்து வருகிறார் பி.சி.ஸ்ரீராம்.

மணிரத்னம் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது என்றும், வசீகரிக்கத்த காதல் கதை என்றும் பி.சி.ஸ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை என்பதால், விரைவில் அதிகாரப்பூர்வமாக பெயர் மற்றும் வேறு யார் எல்லாம் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்று அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x