Published : 24 Nov 2015 01:38 PM
Last Updated : 24 Nov 2015 01:38 PM
'தமிழன் என்று சொல்' படத்தில் சண்முகபாண்டியன் ஜோடியாக சோயா ஆஃப்ரோஸு நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருண் பொன்னம்பலம் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் 'தமிழன் என்று சொல்'. ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க இருக்கும் இப்படத்தை வரதராஜன் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
படப்பூஜையில் கலந்து கொண்ட விஜயகாந்த், "விஜயகாந்த் ஏதோ கத்தி எல்லாம் வைத்திருக்கிறார் என்று நினைத்துவிடாதீர்கள். நிச்சயமாக சொல்வேன், இப்படம் ஒரு மாறுபட்ட படம். தமிழ் மொழிக்காக நான் செய்கிற படம் 'தமிழன் என்று சொல்" என்று பேசினார்.
இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக சோயா ஆஃப்ரோஸிடம்(Zoya Afroz) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT