Last Updated : 04 Jan, 2014 12:49 PM

 

Published : 04 Jan 2014 12:49 PM
Last Updated : 04 Jan 2014 12:49 PM

கதிர்வேலன் காதலைத் தொடர்ந்து நண்பேன்டா

'இது கதிர்வேலன் காதல்' படத்தைத் தொடர்ந்து 'நண்பேன்டா' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2ம் வாரத்தில் தொடங்கும் என அறிவிப்பு.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தைத் தொடர்ந்து பிரபாகரன் இயக்கத்தில் 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். நயன்தாரா, சந்தானம், சாயாசிங் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே 'இது கதிர்வேலன் காதல்' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு இருக்கிறது. படத்தின் இசை ஜனவரி இரண்டாவது வாரத்திலும், படம் ஜனவரி 31ம் தேதி அல்லது பிப்ரவரி 7ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.

அப்படத்தைத் தொடர்ந்து 'நண்பேன்டா' என்னும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். முழுக்க திருச்சியில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

உதயநிதி ஸ்டாலினுடன் சந்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x