Last Updated : 01 Oct, 2016 02:57 PM

 

Published : 01 Oct 2016 02:57 PM
Last Updated : 01 Oct 2016 02:57 PM

அறுந்த ரீலு 24: ரஜினி இன்னமும் மிஸ் செய்யும் இந்தியன்!

ஷங்கர் இயக்கத்தில் 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' ஆகிய படங்களில் நடித்தாலும் இப்போது ரஜினிக்கு 'இந்தியன்' படத்தில் நாம் நடிக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.

'காதலன்', 'ஜென்டில்மேன்' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் உருவாக்கிய கதை 'இந்தியன்'. அக்கதையின் திரைக்கதை வடிவம் முழுமை பெறாமல் ரஜினியை சந்தித்து கதையைக் கூறினார் ஷங்கர். ஆனால் ரஜினி நடிக்க தயக்கம் காட்டினார்.

உடனே முழுமையாக முடித்து கமலை வைத்து 'இந்தியன்' படத்தை முடித்தார் இயக்குநர் ஷங்கர். அப்படத்தைப் பார்த்தவுடன் "நீங்கள் என்னிடம் இப்படி சொல்லவில்லையே" என்று கட்டிப்பிடித்து ஷங்கரைப் பாராட்டினார் ரஜினி.

அப்போது கமலை நெடுமுடிவேணு சந்திக்கும் காட்சியை உங்களை மனதில் வைத்து தான் எழுதினேன் என்று ஷங்கர் சொல்ல, ரஜினி வியந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் இணையலாம் என்று பேசும் போது ஷங்கர் கூறிய கதை தான் 'முதல்வன்'.

இக்கதையில் இப்போது நடிக்கலாமா என்று மீண்டும் ரஜினி தயக்கம் காட்டவே, அக்கதையை அர்ஜூனை வைத்து இயக்கினார் ஷங்கர். நீண்ட நாட்களாக ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படவே அது 'சிவாஜி' படத்தின் மூலமாகவே நிறைவேறியது.

இப்போது ஷங்கரிடம் "நான் 'முதல்வன்' படத்தில் நடிக்காதது கூட வருத்தப்படவில்லை. ஆனால், 'இந்தியன்' படத்தில் நடிக்காத வருத்தம் இருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.

முந்தைய பாகம் - >அறுந்த ரீலு 23: 'ஆல்தோட்ட பூபதி' பாடலை ஆதரித்த மிஷ்கின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x