Published : 28 May 2017 08:48 AM
Last Updated : 28 May 2017 08:48 AM

திரை விமர்சனம்: பிருந்தாவனம்

குளிரும் இயற்கையும் குடியிருக் கும் ஊட்டிக்கு ஓய்வெடுக்க வருகிறார் பிரபல நகைச்சுவை நடிகரான விவேக். அங்கே காது கேளாத, வாய் பேசவியலாத கண்ணன் (அருள்நிதி) என்ற இளைஞனைச் சந்திக்கிறார். அவன் தனது தீவிர ரசிகன் என்பதை அறிந்து நெகிழும் அவர், அவனை நண்பனாக்கிக்கொள்கிறார்.

சிறு வயது முதல் கண்ணனின் தோழி யாக இருக்கும் சந்தியா (தான்யா ரவிச் சந்திரன்), அவனைச் சுற்றிச் சுற்றி வரு கிறாள். ஒரு கட்டத்தில் அவனிடம் காதலை வெளிப்படுத்துகிறாள். ஆனால் மூர்க்கமாக அவளது காதலை நிராகரிக் கிறான் கண்ணன். இதை அறியும் விவேக், கண்ணனையும் சந்தியாவையும் சேர்த்து வைக்க முயற்சி எடுக்கிறார். கண்ணன் காதலை நிராகரிக்கக் காரணம் என்ன? விவேக்கின் முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.

மென்மையும் அன்பும் கூடிய கதா பாத்திரங்களின் பின்னால் ஒளிந்திருக் கும் பின்கதையை அழுத்தமாக வரை வது, சம்பவங்களைச் சரியான வரிசை யில் தொடுத்துச் சீரான வேகத்தில் திரைக் கதையை நகர்த்துவது, வாசலில் நீர் தெளிப்பதுபோலத் திரைக்கதை முழு வதும் நகைச்சுவையைத் தெளிப்பது, அதன் மேல் நல்லுணர்வுகளை வைத் துக் கோலம் போடுவது ஆகியவை இயக் குநர் ராதாமோகனின் முத்திரைகள். ‘பிருந்தாவன’த்திலும் இவை அனைத் தும் இருக்கின்றன. ஒரு நடிகருக்கும் ரசி கருக்கும் இடையிலான அபிமானமும் பிணைப்பும் அவர்கள் எதிர்பாராமல் சந்திக்க நேரும்போது வெளிப்படும் விதம், அவர்களுக்கிடையில் மலரும் நட்பு ஆகியவற்றைக் காட்சிகளாக்கி யிருக்கும் விதம் உணர்வுபூர்வமான அழகைக் கொண்டிருக்கிறது.

கதையின் மையத்தைச் சுற்றிப் பின்னப்படும் சம்பவங்கள் பலவும் ஒரே மாதிரி இருப்பதுதான் படத்தின் சிக்கல். அருள்நிதியின் கோபம், தான்யாவின் ஏக்கம், விவேக்கின் முயற்சி ஆகியவை திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நிகழ் கின்றன. படத்தின் முக்கியமான சஸ் பென்ஸ் உடைந்த பிறகும் படம் நீண்டுகொண்டே போகிறது. ஊட்டி மலைப் பாதைகளில் சுற்றிச் சுற்றி வரும் விவேக்கின் காரைப் போலவே கதையும் பல இடங்களைச் சுற்றிவிட்டு, பிறகு அனைவருக்கும் தெரிந்த இடத்தில் வந்து முடிகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த விழையும் திரைக்கதை, வாழ்வின் சிக்கல்கள், வெவ்வேறு சாயைகள் ஆகியவற்றிடம் பாராமுகமாக இருக்கிறது. எனவே, திரைக்கதையின் மொழி தட்டையாக உள்ளது. இது படத்தின் தாக்கத்தைக் குறைக்கிறது.

நடிகர் விவேக், விவேக்காகவே படம் முழுவதும் வருகிறார். ஒரு நடிகர் ஒரு ஊருக்கு வந்து அங்குள்ள மனிதர்களு டன் இயல்பாகக் கலந்து பழகுவதாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள விதம் நன்றாக உள்ளது. ஆனால், நிஜ விவேக் கின் பாத்திரம், திரையில் நாம் காணும் நகைச்சுவை விவேக்கைப் போலவே இருக்கிறது. வசனம், உடல் மொழி, நாயகி அல்லது நாயகனின் காதலுக்கு உதவுவது, நாயக, நாயகியர் அவரைத் தங்கள் இஷ்டத்துக்கும் வளைப்பது என எல்லாவற்றிலும் திரை விவேக்கே தெரிகிறார்.

காது கேளாத, வாய் பேச முடியாத கண்ணன் கதாபாத்திரத்தில் அருள்நிதி யின் நடிப்பும் அவர் உடல்மொழியும் முக பாவனைகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கின்றன. காதலை நிரா கரிக்கும்போது ஏற்படும் கோபத்தை யும் அன்பைக் காட்ட முடியாத வேத னையையும் நன்றாக வெளிப்படுத்தி யிருக்கிறார்.

தான்யா ரவிச்சந்திரன், கலைக் குடும்ப வாரிசு என்னும் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். துடுக்கான கதா பாத்திரத்தில், ஈர்க்கும் எளிய அழகுடன் அவர் வரும் காட்சிகள் புத்துணர்வுடன் இருக்கின்றன.

எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது முத்திரைகளைப் பதிக்கிறார்கள். அருள்நிதியின் நண்ப னாக வரும் செந்தில் கவனிக்க வைக்கிறார்.

பொன். பார்த்திபன் எழுதியிருக்கும் ஈர்ப்பும் மென்நகைச்சுவையும் கூடிய வசனங்கள், கதாபாத்திரங்களுடன் ஒன்றவைக்கின்றன. கதை நிகழும் களம் ஊட்டியாக இருந்தபோதும் கதையைத் தாண்டித் தனது கேமராவின் கண் களை அலையவிடாமல் தன் பிடியிலேயே வைத்திருந்த ஒளிப் பதிவாளர் எம்.எஸ். விவேக்கானந் தின் ஆர்ப்பாட்டமில்லாத படப்பிடிப்பு படத்துக்கு முதுகெலும்பு. விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டிலுமே இளமைத் துள்ளல்.

மனித உறவுகளின் மேன்மை, மனித நல்லியல்புகள் மீதான நம்பிக்கை, வாழ் வின் மீதான பிடிப்பு ஆகியவற்றை அடித் தளமாகக் கொண்ட ராதா மோகனின் அணுகுமுறைதான் இந்தப் படத்தின் பலம். இனிப்பாகவே இருந்தாலும் அளவு மீறினால் திகட்டும். அது இந்தப் படத்தின் சிறு பலவீனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x