Published : 03 Aug 2016 10:50 AM
Last Updated : 03 Aug 2016 10:50 AM

சினிமா எடுத்துப் பார் 69: வில்லனாக நடிக்க மறுத்த கார்த்திக்!

நான் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ஒரு கதாநாயகனை வில்லனாக்கும் முடிவில் இருந்தோம். கார்த்திக் கிடம் கேட்டபோது, அவர் மறுத்துவிட் டார். கார்த்திக்கை சம்மதிக்க வைக்க ஒரே வழி ஏவி.எம்.சரவணன் சாரிடம், அவரைப் பேச வைப்பதுதான் என்ற முடி வுக்கு வந்தோம். சரவணன் சாரை சந்தித்து கார்த்திக் பேசினார்.

கார்த்திக்கிடம் சரவணன் சார், ‘‘இந் தப் படத்தில் வில்லனா நடிச்சா, அடுத்து ஹீரோவா நடிக்கும் வாய்ப்பு குறைஞ் சிடும். ‘வில்லன்’னு முத்திரை குத்திடு வாங்கன்னு பயப்படுறீங்க. அது சரிதான். நீங்க இதில் நடிங்க. நானே அடுத்து ஒரு படம் உங்களை ஹீரோவா வைத்து எடுக் கிறேன். அந்தப் படத்தை முத்துராமனே இயக்கட்டும்!’’ என்றார். ‘‘நிச்சயமா கொடுப்பீங்களா?’’ என்று திரும்பவும் கேட்டார் கார்த்திக். ‘‘ஏவி.எம்ல எதை யும் சொல்ல மாட்டோம். வாக்கு கொடுத் துட்டா நிச்சயம் அதிலிருந்து பின் வாங் கவே மாட்டோம்!’’ என்று உறுதியளித்தார் சரவணன் சார். ஒருவழியாக, வில்லனாக நடிக்க சம்மதித்தார் கார்த்திக்.

சரவணன் சார் வாக்குக் கொடுத்தபடி கார்த் திக்கை கதாநாயகனாக நடிக்க வைத்து ‘நல்லதம்பி’ என்ற படத்தை எடுத்தார்கள். ‘நல்லவ னுக்கு நல்லவன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடி துளசி. கார்த்திக் துளசிக்கு கார் டிரைவிங் கற்றுக் கொடுக்கும்போது இரு வருக்கும் பழக்கம் ஏற்படும். துளசிக்கு கார் டிரைவிங்கோடு காதலையும் சேர்த்து கற்றுக் கொடுத்துவிடுவார் கார்த்திக். அந்தக் காதலை இருவரும் கொண்டாடும் விதமாக ‘முத்தாடுதே முத்தாடுதே’ என்று ஒரு பாட்டு வைத்தோம். இருவருமே இள ரத்தம். பாடலிலும் இளமை ததும்பியது. அந்தப் பாடலுக்கு புலியூர் சரோஜா நடனம் அமைத்தார். நல்ல நடனம் ஆடக் கூடிய நடிகர், நடிகைகள் கிடைத்தால் அவர் விடுவாரா? படத்தில் அந்தப் பாட்டு அவ்வளவு சிறப்பாக அமைந்தது.

பொதுவாக கம்பெனி ஸ்டிரைக் என்றால் ஊழியர்கள் சிவப்பு கொடி பிடித்து, ‘முதலாளி ஒழிக’ என்று குரல் கொடுத்து தங்களுடைய ஆர்ப்பாட் டத்தை வெளிக்காட்டுவது வழக்கம். இதற்கு மாறாக ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் தொழிலாளர்கள் வெள்ளைக் கொடி பிடித்து வந்து, தங்களுடைய கோரிக்கையை முன் வைப்பார்கள். ‘‘எங் களை வாழ வைக்கும் முதலாளியிடம் எங்களுடைய கோரிக்கைகளை சமா தான முறையில் எடுத்து வைக்கிறோம். அதனால் முதலாளியை ஒழிக என்றும் சொல்ல மாட்டோம். வாழ்க என்றுதான் சொல்வோம். சமாதானம் பேச வந் திருப்பதால் வெள்ளைக் கொடி பிடித்து வந்திருக்கிறோம்!’’ என்று விளக்கம் சொல்வார்கள்.

இந்தக் காட்சியை அப்போது பல பத்திரிகைகளும் பாராட்டின. வித் தியாசமான காட்சியமைப்பு என்று மக்களும் ரசித்து மகிழ்ந்தனர். தொழிலாளி முதலாளி உறவுகள் சரி யாக இருந்தால்தான் அந்த நிறுவனம் ஒழுங்காக நடக்கும். அதுக்கு உதாரணம் ஏவி.எம்.ஸ்டுடியோ. தொழிலாளர் களுக்கு செட்டியார் செய்யாத உதவி களே இல்லை. நிலம் வாங்கிக் கொடுத் தார். அரசாங்கத்திடம் கடன் பெற்று வீடு கட்டிக் கொடுத்தார். தொழிலாளர் கள் வாழ்கிற பகுதியில் பள்ளிக்கூடங் கள் கட்டினார். ஹெல்த் சென்டர் திறந்தார். தொழிலாளர்கள் வீட்டு விஷேசத்துக் காகவே ‘மேனா’ திருமண மண்டபம் கட்டினார். தொழிலாளர்களுக்கும், அவ ருக்கும் இடையே அப்படி ஓர் உறவு இருந்தது.

அப்படிப்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் சில வெளியாட்கள் புகுந்தனர். ‘‘எவ்ளோ உழைக்கிறோம். எங்களுக்கு இவ்வளவுதான் சம்பளமா? இன்னும் கொடுக்கணும்!’’ என்று தொழிலாளர்களை தூண்டிவிட்டனர். ஒரு கட்டத்தில் தொழிலாளர்களைச் சேர்த் துக்கொண்டு வேலைநிறுத்தம் செய்ய வும் ஆரம்பித்தனர்.

ஏவி.எம் ஸ்டுடியோ வாசலில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு தினமும் கோஷம் போடத் தொடங்கினார்கள். செட்டியார் ஸ்டுடியோவை மூடிவிட்டார். மூன்று மாதங்கள் ஸ்டுடியோவில் எந்த வேலையும் நடக்கவில்லை. ஒரு கட்டத் தில் மெய்யப்ப செட்டியார் ஸ்டுடி யோவை பெங்களூருக்கு மாற்ற திட்டமிட் டார். அதன் ஆரம்பமாக சவுண்ட் டிபார்ட் மென்டை பெங்களூரு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்.

ஏவி.மெய்யப்ப செட்டியார், ஏவி.எம்.சரவணன்

அப்போது நானும், ஏவி.எம்மில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த என்.எஸ். மணி அவர்களும் (பின்னாளில் இந்த மணி அவர்கள்தான் ‘புவனா ஒரு கேள் விக்குறி’ படத்தை தயாரித்தவர்) மெய் யப்ப செட்டியார் அவர்களைப் பார்த்து, ‘‘அப்புச்சி… இந்த முடிவுக்கு வராதீங்க? சமாதானமா பேசிப் பார்ப்போம். ஒரு வாரம் டைம் கொடுங்க!’’என்று சொன் னோம். அதுக்கு அவர் கோபத்தோடு, ‘‘மூணு மாசம் ஆச்சு. இவ்வளவு நாள் இல்லாம இனி என்ன சமாதானம்!’’னு கேட்டார். நாங்க பேசி பார்க்குறோம். ஒரு வாரம் மட்டும் டைம் கொடுங்க? என்று வேண்டிக்கொண்டோம். செட்டியார் அவர்கள் யோசித்துவிட்டு, ‘‘ஒரு வாரம்தான் பார்ப்பேன். சமாதானம் ஆகலைன்னா பெங்களூ ருக்கு மாத்திடுவேன்!’’ என்று முடிவாக சொன்னார். நானும், மணியும் மவுண்ட் ரோடு ராஜி பில்டிங்கில் இருந்து சைக் கிளில் ஏவி.எம் ஸ்டுடியோவுக்கு வந்தோம். அப்போதெல்லாம் சைக்கிள் பயணம்தான்.

தொழிலாளர்கள், ஸ்டுடியோவுக்கு முன் போடப்பட்ட குடிசையில் இருந்து கோஷங்கள் போட்டுக்கொண்டிருந் தனர். எங்களை ஸ்டுடியோவுக்குள் போக அனுமதிக்கவில்லை. அப்போது நானும், மணியும் அவர்களிடம், ‘‘ஸ்டுடியோவுக் குள்ள இருக்கிற தென்னை மரங்கள், செடிங்க எல்லாம் மூணு மாசம் தண்ணி ஊத்தாம வாடிப் போயிருக்கும். இனி மேலும் தண்ணி விடலைன்னா செத்துப் போய்டும். நாளைக்கு திரும்ப ஸ்டுடியோ திறக்கும்போது வெறிச்சோடி போயிருக் கும்!’’ என்று சொன்னோம்.

‘‘சரி போங்க!’’ என்று சொல்லி, உள்ளே போக அனுமதித்தார்கள். நாங்கள் உள்ளே போய் தண்ணி ஊத்திட்டிருந் தோம். அப்போ நாலு, ஐந்து தொழி லாளர்கள் மட்டும் உள்ளே வந்தார்கள். எங்களிடம் ‘‘ஏன் சார் செட்டியார் ஸ்டுடி யோவைத் திறக்கும் மூடில் இருக் காரா?’’ என்றார்கள். ‘‘நீங்க சரின்னு சொன்னா செட்டியாரிடம் பேசி, சமா தானமா ஒரு முடிவு எடுக்கலாம்!’’ என்று சொன்னோம். அதற்கு அவர்கள் ‘‘நீங்கள் சொல்வதும் சரிதான். எங்களில் சில பேர் தான் வம்பு செஞ்சுட்டு இருக்காங்க!’’ என்று பதிலளித்தார்கள். ‘‘சரி, வேலைக்கு வர விரும்புறவங்களை எல்லாம் அழைச் சுட்டு, நாளைக்கு ஏவி.எம் ஸ்கூல் கிரவுண் டுக்கு வந்துடுங்க. எல்லாரும் பேசி ஒரு முடிவு எடுப்போம்’’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம். இந்த விஷயம் எப்படியோ வேலைநிறுத்தத்தைத் தூண்டிவிட்டவர்களுக்குத் தெரிந்து விட்டது.

நாங்கள் திரும்பும்போது எங்களைப் பிடித்துக்கொண்டு, ‘‘தொழிலாளர்கள் விஷயத்தில் தலையிட்டால் கொலையே விழும்’’ என்று சொல்லி எங்களிடம் சண்டையிட்டார்கள். அவர்களிடத்தில் ‘‘கடந்த மூணு மாசமா உங்கப் போராட் டத்தால் தொழிலாளர்கள் மட்டும் பாதிக் கப்படலை. அவங்களோட குடும்பமே கஷ்டப்படுறாங்க. ஆக, மொத்தத்துல எல்லாரும் பட்டினி கிடக்குறாங்க. இதுக்கெல்லாம் மாசா மாசம் பணம் கொடுக்கிறேன்னு சொல்லுங்க. இந்த விஷயத்துல நாங்க தலையிடலை!’’ என்று சொன்னோம். அதை பலர் சரியாக புரிந்துகொண்டார்கள். மறுநாள் எங்களை சந்தித்து, ‘‘செட்டியார் அவர்களைப் பார்க்க வருகிறோம்!’’ என்று ஒப்புக்கொண்டார்கள்.

அடுத்த நாள் மெய்யப்ப செட்டியார் அவர்களைப் பார்க்க தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு செட்டியார் வீட் டுக்கே போனோம். செட்டியாரிடம் விஷ யத்தை சொன்னோம். செட்டியார் வாச லுக்கு வந்து தொழிலாளர்களைப் பார்த் தார். தொழிலாளர்களும் செட்டியாரைப் பார்த்தார்கள். அந்த இடத்தில் ஒரே அமைதி நிலவியது. அடுத்து அங்கே என்ன நடந்தது?

- இன்னும் படம் பார்ப்போம்... | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x