Published : 20 Jul 2016 10:33 AM
Last Updated : 20 Jul 2016 10:33 AM

சினிமா எடுத்துப் பார் 67: கமலின் வெற்றியில் இன்னொரு மைல்கல்!

ஹெலிகாப்டரைக் கொண்டு வருகிற ஒரு முடிவோடு எம்.எஸ்.குகன் அவர்கள் புறப்பட்டுப் போனார். அவர் புறப்பட் டுப் போனதும் நான், ‘‘குகன் அவர் கள் இளரத்தம். சூட்டோடு புறப்பட்டிருக் கிறார். வரும்போது ஹெலிகாப்டரில் தான் வந்து இறங்குவார்’’ என்று சொன் னேன். நான் சொன்னபடியே குகன் அவர்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி னார். நாங்கள் எல்லோரும் கைதட்டி வர வேற்றோம். குகன் அவர்கள் ஏவி.எம்மின் பேரன். ஏவி.எம்.சரவணன் சாரின் மகன் என்பதை நிரூபித்தார். ஹெலிகாப்டரில் கமலை வைத்து எடுக்க வேண்டிய ஷாட்டு களை எல்லாம் எடுத்து முடித்துவிட்டு, திட்டமிட்டபடி சென்னைக்குப் புறப்பட் டோம். சென்னைக்கு வந்ததும் எடிட்டர் விட்டல் சாரிடம் பம்பாயில் எடுத்த ஷாட் விஷயங்களைப் பற்றி எல்லாம் விளக்கி சொன்னோம்.

நாங்கள் பம்பாயில் எடுத்த ஷாட்டுகளையும், ஹிந்தி படத்தில் இருந்த லாங் ஷாட்டுகளையும் சரியாக மேட்ச் செய்து எடிட் செய்தார். அதைப் பார்த்ததும் எல்லோரும் அசந்து விட்டோம். விட்டல் சாரின் எடிட்டிங் திறமைக்கு அந்தக் காட்சியே சாட்சியாக அமைந்தது. படம் ரிலீஸானதும் கிளை மாக்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டது. தமிழ் படத்தைப் பார்த்தவர்கள் ஒரிஜினல் ஹிந்தி படத்தைப் பார்த்தபோது ‘தூங் காதே தம்பி தூங்காதே’ கிளைமாக்ஸை அப்படியே ஹிந்தியில் தூக்கி வைத்து விட்டார்கள் என்று பேசினார்கள். இது தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கிடைத்த பாராட்டு!

படத்தில் கமலை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பல குதிரை வீரர்கள் வந்து சூழ்ந்துவிடுவார்கள். அவர்களிடம் இருந்து கமல் தப்பிக்கும்படியாக காட்சி அமைத்திருந்தோம். குதிரை சண்டைக்கு பம்பாயில் ஃபைட்டிங் மாஸ்டர் பப்பு வர்மா மிகவும் திறமைசாலி. அவர்கள் குடும்பமே குதிரை சண்டைக்கு பெயர் போனது. அந்த பப்புவர்மா யார் தெரியுமா? ஹிந்தியில் பெரிய கதாநாயகன் அஜய்தேவ்கானின் தந்தை. அவரைத் தொடர்புகொண்டு ஒப் பந்தம் செய்தோம். பம்பா யில் படப்பிடிப்பு.

கமல் அந்தக் குதிரை வீரர்களை எதிர்கொள் வார். கையில் கிடைத்த மரக் கட் டையை எடுத்துக்கொண்டு ஓடிவரும் குதிரையின் காலில் அடிப்பார். குதிரையும், வீரனும் தலைக்குப்புற விழுவார்கள். பப்புவர்மா கமல் எப்படி அடிக்க வேண்டும் என்பதையும், குதிரை எந்த இடத்தில் விழும் என்பதையும் சரியாக சொல்வார். அதற்கு தகுந்த மாதிரி கேமரா கோணங்களை வைத்து எடுத்தோம். மிகவும் த்ரில்லாக இருந்தது. பப்புவர்மாவுக்கு ஒரு பெரிய ‘ஜே’ போட்டோம். ஏவி.எம்மின் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படம் கமலின் வெற்றியில் இன்னொரு மைல்கல்! வெள்ளிவிழா கொண்டாடிய படம்.

கே.பாலசந்தர் சாரின் ‘கவிதாலயா’ நிறுவனத்துக்காக ரஜினியை வைத்து ஒரு அரசியல் கலந்த படத்தை எடுத் தோம். அரசியலில் ஊழல் செய்பவர் களை காந்திய வழியில் ரஜினி திருத்த முயற் சிப்பார். அவர் கள் திருந்தா மல் ரஜி னிக்கு பல விதத்திலும் தொல்லை களைக் கொடுப் பார்கள். இவர் களுக்கு காந் திய வழியில் மிதவாதத்தில் சொன்னால் புரி யாது என்று, சுபாஷ் சந்திரபோஸின் தீவிர வாத வழியில் ஆயு தம் எடுப்பார். அதற்காக இந்தப் படத்துக்கு ‘நான் காந்தியல்ல’ என்று பெயர் வைத்தோம். காந்தி பெயரை வைக்கக்கூடாது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டுக்கே போக விரும்பாத நான், கோர்ட் படிகளை ஏறினேன். அந்த கோர்ட்டில் ஏழைகள் படுகிற கஷ்டங்களைப் பார்த்தபோது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்க தாமதம் ஏற்படுவதில் ஏழைகள் தங்கள் சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டு தெருவுக்கு வந்துவிடுகிறார்கள் என் பதை காணும்போது கண் கலங்கியது. இந்த நிலை ஏற்படாமல் இருக்க ஒரே வழி கோர்ட் படி ஏறாமல் இருப்பதுதான்.

விசாரணையில் ‘நான் காந்தியல்ல’ என்று பெயர் வைக்கக்கூடாது என்று தீர்ப்பாயிற்று. அதனால் ‘நான் மகான் அல்ல’ என்று பெயரை மாற்றி வைத் தோம். தவறு செய்யும் அரசியல்வாதி களை ரஜினியால் அமைதியாகவும் திருத்த முடியவில்லை. ஆயுதம் எடுத்தும் திருத்த முடிய வில்லை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர் கள் ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடி யாது’ என்று எழுதி யதைப் போல் அவர் களாக திருந்தாவிட்டால் அரசியலில் மாற்றம் ஏற் படாது என்பதுதான் இன் றைய சூழ்நிலை. இந்த நேரத்தில் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படு கிறேன்: உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினியின் ‘கபாலி’ படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்!

கமல் நடித்து ‘கவிதாலயா’ தயாரித்த படம் ‘எனக்குள் ஒருவன்’ ஒருவனுக்கு சென்ற பிறவியின் ஞாபகங்கள் வந்து அவனை பாடாய் படுத்துவதுதான் கதை. அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் கமலின் வாழ்க்கையில் அடிக்கடி மயக்கம் வந்து, முற்பிறவியின் நினைவு கள் வந்துவிடும். அந்தப் பிறவியில் வரக் கூடிய கதாபாத்திரம் ஒரு ‘நேபாளி’. கமலுக்கு வித்தியாசமான மேக்கப் போடு வதில் ஆர்வம் கொண்டவர் என்பதால், அந்த நேபாளி கதாபாத்திரத் துக்காக தன் கண்களை எல்லாம் இழுத்து ஒட்டிக்கொண்டு அசல் நேபாளியாகவே மேக்கப்பில் காட்சி அளித்தார்.

கமலுக்கும், சத்யராஜுக்கும் டார்ஜிலிங்கில் உயரமான இரண்டு மலைகளை இணைப்பதற்கான ‘ரோப்’களில் போகிற விஞ்ச்சில் ஒரு சண்டை காட்சி வைத்தோம். ஒரு விஞ்ச்சில் கமல்ஹாசன், இன்னொரு விஞ்ச்சில் சத்யராஜ் வர… ஒரு இடத் தில் கமல் விஞ்ச்சை சத்யராஜ் பிடித்து ஏறி, கமலோடு சண்டை செய்து அவரை பள்ளத்தில் தள்ள வேண்டும்.

‘‘இது ரொம்ப ரிஸ்க்கான ஃபைட், கவனம் தேவை’’ என்பதை விளக்கிச் சொன்னோம். இதை கேட்ட சத்யராஜ், ‘‘இந்த விஞ்ச்ல எல்லாம் ரிஸ்க் எடுத்து என்னால் சண்டை செய்ய முடியாது. டூப் போட்டு எடுத்துடுங்க. அதுக்கு மேட்ச் செய்து என்னை க்ளோஸ் அப்ல எடுத்துடுங்க. என்னை ஆளை விடுங்க சார்’’ என்றார்.

கமலை அழைத்து ‘‘ உங்க ரெண்டு பேருக்குமே டூப் போட்டு விஞ்ச் ஷாட்டுகளை எடுத்துடுறேன். அப்புறம் உனக்கும் சத்யராஜுக்கும் மேட்ச் செய்து க்ளோஸ் அப் எடுத்துக்கிறேன்’’ என்று சொன்னேன். கமலும் ‘‘சரி சார்!’’ என்று ஒப்புக்கொண்டார்.

மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம் டூப் ஷாட்ஸ் எடுக்கும்போது, ‘‘டூப்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பு செய்துகொடுங்கள்’’ என்று எச்சரித்து அவர்களை விஞ்ச்களுக்கு போகச் சொன்னோம். இரண்டு, மூன்று கேமராக்களை வைத்து, ‘‘ஷாட் ரெடி!’’ என்று சுப்பராயனுக்கு கொடி அசைத்து காட்டியதும் விஞ்ச் புறப்பட்டது. விஞ்ச், கேமராவை நெருங்கி வர வர…. அதில் டூப் வருவதற்கு பதிலாக கமலே தொங்கிக்கொண்டு வந்தார். எங்கள் உடம்பெல்லாம் ஆடிப்போய் விட்டது. கீழே விழுந்தால் எலும்பு கூட தேறாது.

அந்த நேரத்தில் விஞ்சை நிறுத்தவும் முடியாது. அப்படி நிறுத்தினால் 700 அடிக்கு மேல் விஞ்ச் அந்தரத்தில் நின்றுவிடும். ஒன்றும் புரியாமல் நான் நின்றேன். அடுத்து நடந்ததை அடுத்த வாரம் சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்... படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x