Published : 25 Oct 2016 10:33 AM
Last Updated : 25 Oct 2016 10:33 AM

இவரைத் தெரியுமா?- பிரமோத் சக்சேனா

ஆக்ஸிஜன் சர்வீஸஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2004-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

தொடர் தொழில் முனைவோராகவும் உள்ளார். 2013-ம் ஆண்டு எம்பவர் சாப்ட்காம் நிறுவனத்தைத் தொடங்கியவர். கோரஸ் கால் கான்பரன்சிஸ் சர்வீசஸ் என்ற நிறுவனத்தையும் தொடங்கியவர்.

2010-ம் ஆண்டு முதல் கிரீன் கிராமின் மைக்ரோபைனான்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவராகவும் இருந்து வருகிறார்.

1998-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மோட்டோரோலா இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலும், 1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை எஸ்ஸார் குழும தொலைத்தொடர்பு தொழிலின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலும் இருந்தவர்.

தொலைத்தொடர்பு, ரசாயனப் பொறியியல் துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

ரூர்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் ரசாயனப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x