Published : 03 Oct 2015 08:07 AM
Last Updated : 03 Oct 2015 08:07 AM

இவரைத் தெரியுமா?- ஆர்.என்.நாயக்

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். இதற்கு முன்பு நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

மத்திய மின்துறை அமைச் சகத்தால் நியமிக்கப் பட்டவர். 2011 செப்டம்பர் மாதத்திலி ருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார். ஐந்து ஆண்டுகள் இந்த பொறுப்பில் இருப்பார்.

மின்சார துறை பணிகள் சார்ந்து 36 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பவர் கிரிட் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் 22 ஆண்டுகள் பணியாற்றியவர்.

பொறியியல், தொலைத் தொடர்பு, கிரிட் நிர்வாகம், ஒப்பந்த நிர்வாகம், தரக் கட்டுப்பாடு, மனித வளம் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.

என்டிபிசி, செயில் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். இந்திய மின் பொறியியல் துறைக்கு பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தவர்.

ரூர்கேலா மண்டல பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பட்டமும், கோரக்பூர் ஐஐடியில் எம்டெக் (எலெக்ட்ரிக்கல்) பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x