Published : 21 Jan 2017 10:48 AM
Last Updated : 21 Jan 2017 10:48 AM

இவரைத் தெரியுமா?- ஆண்ட்ரு லாங்ஸ்டீ

தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் (டிவிசி) நிறுவனத்தின் தலைவர். 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

மத்திய அரசால் நியமிக்கப் பட்டவர். மத்திய அரசுச் செயலருக்கு இணையான அதிகாரம் கொண்டவர். 1982-ம் ஆண்டு இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவைத்துறை அதிகாரியாக தேர்வானவர்.

மத்திய செலவினங்கள் துறையில் கணக்கு தணிக்கை இயக்குநராக பணியாற்றியவர். மேகலாயா, சிக்கிம், திரிபுரா மாநிலங்களுக்கு முதன்மை கணக்கு அதிகாரியாகவும், பாதுகாப்புதுறை கணக்கு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேகாலயா மாநில மின்வாரிய கழகத்தின் இயக்குநராகவும் இருந்தவர்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கூட்டமைப்பிலும், பொருளாதாரம் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பாக ஆப்பிரிக்காவில் திட்டப்பணியிலும் செயல்பட்டுள்ளார்.

ஷில்லாங்கில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் ஹில்ஸ் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் உயர்கல்வியும், ஐஐஎம் பெங்களூரு கல்வி நிறுவனம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் மேலாண்மையியலில் உயர்கல்வியும் முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x