Published : 26 Feb 2017 12:36 PM
Last Updated : 26 Feb 2017 12:36 PM

அனைவரும் வரி செலுத்தும்போது வரி விகிதத்தை குறைக்க முடியும்: மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து

அனைத்து மக்களும் முறையாக வரியை செலுத்தும் பட்சத்தில் வரி விகிதத்தைக் குறைக்க முடியும் என மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:அனைவரும் வரியை சரியாக செலுத்தும்போது, வருமான வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியை நம்மால் குறைக்கமுடியும். 0 முதல் 5 சதவீத வரி விகிதம் இருக்க வேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள். அனைத்தையும் இதே அளவுக்குள் வைத்தால், லாபமீட்டும் நிறுவனங்கள் நாட்டுக் காக என்ன செய்யும்? அனைத்து தணிக்கையாளர்களும் தங்களது வாடிக்கையாளர்கள் வரி செலுத் துமாறு கோரிக்கை வைக்க வேண்டும். தற்போது காற்றாலை மின்சாரம் ஒரு யூனிட் 3.46 ரூபா யாக இருக்கிறது. எந்தவிதமான சலுகைகளும் கொடுக்காமல் 1000 மெகா வாட் உற்பத்திக்கு இந்த கட் டணம் நிர்ணயம் செய்யப் பட்டிருக் கிறது என கோயல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x